உத்திரபிரதேசம் கான்பூர் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துவிட்டு, சிறுமியின் சிறுநீரகத்தை எடுத்ததாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பத்ராஸ் பகுதியில் வசித்து வருபவர் பரஸ்பிராம். இவருக்கு திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், இருவருக்கு பணத்தை கொடுத்து இந்த குற்றத்தை செய்ய கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று பீரன் மாறும் அங்கூர் ஆகிய இருவரும் மது அருந்தி விட்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர், சிறுமியின் சிறுநீரகத்தை வெட்டி எடுத்து பரஸ்பிராமிடம் கொடுத்துள்ளனர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மூட நம்பிக்கைகள் காரணமாகவே இந்த குற்றம் நடந்துள்ளது என அந்த மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். இதில், குற்றவாளிகளான பராஷ்ரம் மற்றும் அவரது மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 301 மற்றும் 202 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரிக்க விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.